நாட்டில் வாகன விற்பனை மெல்ல மெல்ல வளர்ச்சியை பதிவு செய்யும் விலையில், இதுவரை தொடர்ந்து வந்த வீழ்ச்சி குறித்து நிர்மலா சீதாராமன் புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாகனச் சந்தை காந்த 10 மாதங்களுக்கும் மேலாக திண்டாட்டத்தைக் கண்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய தீர்வை வழங்கியுள்ளார்.
அண்மையில் சென்னைக்கு வருகை தந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிட்டி யூனியன் வங்கியின் 110வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
முன்னதாக தென்னிந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு சங்கம் அண்ணா சாலையில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில், நிர்மலா சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார்.